மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

படம் | ஐசிசி

Published On :

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணியில் மாற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், காயம் காரணமாக லாக்கி ஃபெர்குசனுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார். நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள கைல் ஜேமிசன் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அவர் தற்போது மாற்று வீரராக நியூசிலாந்து அணியில் இணைந்துள்ளார்.

30 வயதாகும் கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.