ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!

ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணி
Published on
Updated on
1 min read

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான 15 பேர் கொண்ட தமிழக கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் கிஷோர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தொடரில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஷாரூக் கான், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரட்டைசதம் விளாசிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க | ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!

முந்தைய சுற்றுகளில் விளையாடி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடவிருப்பதால், அணியில் இடம்பெறவில்லை.

5 போட்டிகளில் வெற்றியுடன் 19 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள தமிழக அணி, இறுதிச் சுற்றில் சண்டீகர் மற்றும் ஜார்க்கண்ட் அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது.

தமிழ்நாடு அணி: ஆர்.சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), விஜய் சங்கர், பாபா இந்தர்ஜித், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், அஜித் ராம், லக்‌ஷய் ஜெயின், லோகேஷ்வர், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், சித்தார்த், முகமது.

இதையும் படிக்க | மும்பை ரஞ்சி அணியுடன் ரோஹித் சர்மா பயிற்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com