ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. அணியை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா
ரஞ்சி கோப்பையில் ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வருகிற ஜனவரி 23 ஆம் தேதி விளையாடவுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அட்டவணையைப் பாருங்கள். கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நாங்கள் 45 நாள்கள் வீட்டில் இருப்பதில்லை. ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, நேரம் கிடைக்கும். ஆனால், அப்போது உள்ளூர் போட்டிகள் நடைபெறுவதில்லை. நமது உள்ளூர் போட்டிகள் அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் நிறைவடைகிறது.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள், உள்ளூர் போட்டிகள் நடைபெறும்போது அதில் பங்குபெற்று விளையாடலாம். கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்று விளையாடி வருகிறேன். அப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும்போது, உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறிது ஓய்வு தேவைப்படும். யாரும் உள்ளூர் போட்டிகளை விளையாடக் கூடாது என நினைப்பதில்லை. அதனைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை என்றார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ரோஹித் சர்மா ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்
ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



