எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாபடம் | AP
Published on
Updated on
2 min read

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர்.

மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

ரோஹித் சர்மா முடிவு செய்வார்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்தாக நம்புகிறேன். அது போன்று, ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு முடிவு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவு.

சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். இறுதி முடிவு இந்திய அணித் தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் உள்ளது என்பதும் உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது என்றார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரோஹித் சர்மா, வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com