திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!

டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.

News image

ஆண்ட்ரே ரஸல் (கோப்புப் படம்)

Updated On :19 ஜூலை 2025, 7:38 pm IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளோடு ஓய்வு பெறவுள்ளதாக ரஸல் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே தன்னுடைய பெருமைமிகு தருணம் என ஆண்ட்ரே ரஸல் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நேர்காணலில் அவர் பேசியதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியதே டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பெருமைமிகு தருணம். மற்ற பேட்டர்கள் ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின், நானும் லெண்டல் சிம்மன்ஸும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றோம்.

இந்தியாவுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் 190 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தினோம். ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க, சிறிது அழுத்தம் இருந்தது. ஆனால், ஆடுகளம் நன்றாக இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றோம். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அங்கம் வகித்துள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற தருணம் மிகவும் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி இவை இரண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக நான் விளையாடிய பெருமைமிகு தருணங்கள் என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

West Indies batsman Andre Russell has shared his proudest moment in T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.