/

ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

News image

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஹர்மன்ப்ரீத் கௌர். - படம்: எக்ஸ் / ஐசிசி வுமன்.

Updated On :22 ஜூலை 2025, 9:25 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்று தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

தொடரில் கடைசி போட்டியான 3-ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கத் தேர்வு செய்தது.

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சதமடித்து அசத்தினார். மந்தனா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா அரைசதம் அடித்தார்.

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஹர்மன்ப்ரீத் கௌர்.

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஹர்மன்ப்ரீத் கௌர். - படம்: எக்ஸ் / ஐசிசி வுமன்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து மகளிரணி சார்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள்.

இந்தத் தொடரை வெல்ல இங்கிலாந்து மகளிரணிக்கு 319 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

Summary

The Indian women's team scored 318 runs in the final ODI against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.