திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆர்சிபிக்கு ஆதரவா..? குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!

குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கைப் பற்றி...

News image

குஜராத் வந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி.

Updated On :3 ஜூன் 2025, 5:32 pm IST

பெங்களூரு - பஞ்சாப் இடையிலான இறுதிப் போட்டியைப் பார்க்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குஜராத்துக்கு வருகை தந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சரிசமமான பலம் வாய்ந்த மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் மோதுவதால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

பெங்களூரு அணிக்கு ஆதரவளித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் உள்ளிட்டோரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரிட்டன் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “நான் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். எனது மனைவி அக்‌ஷதா மூர்த்தி பெங்களூருவைச் சேர்ந்தவர். எனது முழு ஆதரவும் ஆர்சிபிக்குதான். என்னிடம் விராட் கோலி வழங்கிய பேட் ஒன்றும் உள்ளது. இது என்னிடம் உள்ள விலை மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்று.

ஐபிஎல் கிரிக்கெட்டின் வடிவத்தையே மாற்றியுள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், எல்லா இடங்களிலும், தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஐபிஎல்லில் விளையாட விரும்புகிறார்கள்.

கடந்த வாரம் நான் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜேக்கப் பெத்தேல் ஒரு அற்புதமாக விளையாடினார். ஐபிஎல் அவரை சிறந்த வீரராக மேம்படுத்தியுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.