இந்திய வீரர் புஜாராவுக்கு 2 ஏசிஎல் தசைகளும் கிழிந்தும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
குஜராத்தில் பிறந்த புஜாரா (37) 103 டெஸ்ட்டுகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள், 35 அரைசதங்கள், 3 இரட்டைச் சதங்களும் அடங்கும்.
இந்திய அணிக்காக 2010-இல் டெஸ்ட்டில் அறிமுகமான புஜாரா கடைசியாக 2023-இல் விளையாடினார்.
சமீபகாலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கமால் இருக்கும் புஜாரா குறித்து முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
புஜாரா ஆட்டமிழக்கவே மாட்டார்
14 வயதில் திடலுக்குச் சென்று மாலை வரும்போது எனது முகத்தின் நிறம் மாறியிருக்கும். ஏனெனில், புஜாரா 2-3 நாள்கள் விக்கெட்டே விடாமல் ஆடிக்கொண்டிருப்பார். நாங்கள் வெயிலில் ஃபீல்டிங் செய்வது வழக்கமாகிவிடும்.
ஒருமுறை எனது அம்மாகூட இதைக் கேட்டார். ’நன்றாக இருக்கிறாய். கிரிக்கெட் விளையாடச் சென்ற ஒரு வாரத்தில் மாறிவிடுகிறாயே’ என்றார்.
அதற்கு நான், ‘என்ன செய்வது அம்மா, புஜாரா என்று ஒருவன் இருக்கிறான். 3 நாளுமே அவன் பேட்டிங் விளையாடுகிறான்’ என்றேன்.
இதுதான் எங்களுக்கு புஜாரா குறித்த முதல் அடையாளமாக இருந்தது.
இரண்டு ஏசிஎல் தசைகளும் கிழிந்தன
புஜாராவின் தொடக்க காலத்திலேயே அவரது இரண்டு ஏசிஎல் (முன்புற சிலுவை தசைநார்) தசைகளும் கிழிந்தன. அது மிகப்பெரிய மோசமான காயம்.
கிரிக்கெட்டர் மட்டுமல்லாமல் எந்த ஒரு விளையாட்டை விளையாடாவிட்டாலும் அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், ஒரு விளையாட்டு வீரராக இருந்து 2 ஏசிஎல் தசைகளும் கிழிவது மிகவும் கடினமானது.
புஜாரா ஓடும் தொழிநுட்பத்தை நாங்கள் கிண்டல் செய்திருக்கிறோம். ஆனால், அவர் 100 டெஸ்ட்டுகளை கடந்து விளையாடியுள்ளார். எப்படி இப்படி முடிந்தது? மொத்த பாராட்டும் அவருக்குதான்.
புஜாராவுக்கு கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிகுதியாக நிரம்பி இருக்கிறது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

விளையாட்டு துளிகள்...
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



