தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தமிழகத்தின் திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன் இடையிலான போட்டி ஜூன் 8 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின், திருப்பூர் வீரர் சாய் கிஷோரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அஸ்வின் அவரின் விக்கெட்டுக்கு மறுப்பு தெரிவித்தாலும் களநடுவர் கிருத்திகா, அவர் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
ஆனால், அந்தப் பந்து வெளியே செல்லுவது போன்று இருந்தது. முன்னதாக, ஒரே ஓவரில் திண்டுக்கல் அணியினர் வைடுக்காக இரண்டு ரிவியூக்களையும் இழக்க நேரிட்டதால், அஸ்வினால் நடுவரின் முடிவை எதிர்க்க முடியவில்லை.
இதனால், கடும் விரக்தியில் உரக்க கத்தியவாரே வெளியே சென்ற அஸ்வின், தனது பேட்டால் கால் பேடுகளில் கடுமையாகத் தாக்கினார். மேலும், தனது கையுறைகளையும் கோபத்துடன் மைதானத்துக்கு வெளியே தூக்கியெறிந்தார். கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய அஸ்வினின் விடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
நடுவர்களில் விசாரணையில் தன் மீதான தவறை அஸ்வின் ஒப்புக்கொண்டார். இதனால், அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதமும், கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாக பயன்படுத்திய காரணத்துக்காக கூடுதலாக 20 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Ashwin was controlling himself just because the umpire was a female ððpic.twitter.com/3XM6WAMPgy
— Kusha Sharma (@Kushacritic) June 9, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தங்க வளையல் திருடிய பெண் கைது

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

ராமேசுவரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுங்கள்! - ரவி அஸ்வின்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



