ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக மெஹிதி ஹாசன் மிராஸ் செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (ஜூன் 12) அறிவித்தது. மெஹிதி ஹாசன் மிராஸ் அடுத்த ஓராண்டுக்கு அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் நலனை பாதிக்குமா?
ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனை நியமித்துள்ள நிலையில், கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்காது என புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் கேப்டனை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணிக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பது கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கேப்டன் பொறுப்பு தொடர்பாக தனிப்பட்ட நபரால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நேற்று என்னை தொலையில் அழைத்துப் பேசினார். அவர்கள் எனக்கு கேப்டன் பொறுப்பை வழங்க உள்ளதாகவும், அவர்களுக்கு அதிக நேரமில்லை எனவும் கூறினார்.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். ஆனால், கேப்டன் பொறுப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். கேப்டன் பொறுப்பு மாற்றம் என்னையோ, ஷாண்டோவையோ பாதிக்காது. அவர் கேப்டனாக செயல்பட்டபோது, அவருக்கு நிறைய உதவியுள்ளேன். நான் கேப்டனாக செயல்படும்போது, எனக்கு அவர் உதவி செய்வார். நாங்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றார்.
27 வயதாகும் மெஹிதி ஹாசன் மிராஸ் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன்களை மாற்றிய ஜிம்பாப்வே!

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்: முன்னாள் வீரர்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல எங்களது திட்டம் இதுதான்: ஆப்கன் கேப்டன்

கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்கியது நியாயமா? கங்குலி கூறியதென்ன?
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



