விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதல் போட்டியைத் தவறவிடும் ஹார்திக்... மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை தலைமை தாங்கும் சூர்யகுமார் யாதவ்..

News image

ஹார்திக் பாண்டியாவுடன் சூர்யகுமார் யாதவ்..

Updated On :19 மார்ச் 2025, 7:31 am

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கடந்த தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இருப்பினும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், கேப்டன் ஹார்திக் பாண்டியா முதல் போட்டியில் மட்டும் விளையாடாதது மேலும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதுபற்றி ஹார்திக் பாண்டியா பேசுகையில், “எங்கள் அணியில் இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட், டி20 கேப்டன் இருப்பது எங்களுக்கு சாதகமானது. மேலும், சூர்யகுமார் யாதவுக்கு அணியை வழிநடத்துவது என்பது புதியது கிடையாது. அவர் தேசிய அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

கடந்த சீசன் மும்பை அணிக்கு மிகவும் மோசமாகவே அமைந்தது. ஹார்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.