அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நசீம் ஷா வீட்டில் துப்பாக்கிச் சூடு..! காவல்துறை விசாரணை!

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் நசீம் ஷா வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி...

News image

நசீம் ஷா. - படம்: ஏபி

Updated On :12 நவம்பர் 2025, 2:20 pm IST

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் நசீம் ஷாவின் பூர்விக வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குக் காரணம் சொத்து பிரச்னையாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவின் பூர்வீக வீடு கைபர் பக்துன்வா மாகாணத்தில் லோவர் திர் மாவடத்தில் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா இலங்கைக்குக் எதிரான போட்டியில் விளையாட அணியுடன் தங்கியதால் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிகிறது.

அடையாளம் தெரியாத நபரினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சொத்துப் பிரச்னைக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாகாணங்களில் பழங்குடியினங்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி தைமூர் கான் பேசியதாவது:

இந்தப் பகுதிகளில் இருக்கும் பொதுவான பாதுக்காப்பின்மையின் பிரதிபலிப்பாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது.

இது தொடர்பாக ஒரு குழுவை உருவாக்கி, நசீம் ஷாவின் தந்தை, உறவினர்களைப் பார்த்து விசாரித்து வருகிறோம். மேலும், வீட்டிற்கு பாதுக்காப்பை அதிகரித்துள்ளோம் என்றார்.

வீட்டின் முகப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் பலரும் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The firing incident at the ancestral home of Pakistan cricketer Naseem Shah has been attributed to a possible dispute over property by police probing the attack that has caused a furore in the region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.