தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது: ரிஷப் பந்த்

காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

News image
ரிஷப் பந்த்- படம் | பிசிசிஐ
Updated On :13 நவம்பர் 2025, 4:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (நவம்பர் 14) தொடங்குகிறது.

கடந்த ஜூலையில் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த்துக்கு பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து அண்மையில் குணமடைந்த ரிஷப் பந்த், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது எனவும் ஆனால், காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் நன்றாக விளையாடத் தொடங்கிவிட்டதாகவும் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: காயம் ஏற்பட்ட பிறகு அதிலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது. ஆனால், கடவுளுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடவுளுடைய ஆசிர்வாதத்தினால் நான் இந்த முறையும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறை நான் ஆடுகளத்துக்குள் நுழையும்போதும் நன்றியுணர்வுடன் இருக்க முயற்சி செய்கிறேன். அதன் காரணமாகவே ஆடுகளத்துக்குள் நுழையும்போது, மேலே பார்த்து கடவுளுக்கும், என்னுடைய பெற்றோருக்கும், எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். நான் என்ன செய்தாலும் அதில் என்னுடைய நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன் என்றார்.

summary

Indian wicketkeeper Rishabh Pant has said that recovering from injury is never easy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.