திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பந்துவீச்சில் அசத்திய ஜடேஜா; பெரிய வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

News image

படம் | AP

Updated On :15 நவம்பர் 2025, 5:10 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களும் எடுத்தனர்.

பெரிய வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி

இந்திய அணியைக் காட்டிலும் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அய்டன் மார்க்ரம் 4 ரன்கள், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கல்டான் தலா 11 ரன்கள், டோனி டி ஸார்ஸி 2 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்கள், கைல் வெரைன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவைக் காட்டிலும் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா 29 ரன்களுடனும், கார்பின் போஸ்ச் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

கைவசம் தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருக்க, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.

Summary

The Indian team is moving towards a big victory in the first Test match against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.