குவாஹாட்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
குவாஹாட்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!
படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி தேநீர் இடைவேளையின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அய்டன் மார்க்ரம் 38 ரன்களிலும், ரியான் ரிக்கல்டான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அய்டன் மார்க்ரமின் விக்கெட்டினை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்திய நிலையில், ரிக்கல்டானின் விக்கெட்டினை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களைக் கடந்து நிதானமாக விளையாடி வருகிறது. கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

At the tea break in the second Test against India, South Africa were 82 for one.

குவாஹாட்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com