ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பேட்டர்களை விட அதிக பந்துகள் விளையாடிய குல்தீப் யாதவ்..! என்ன நடக்கிறது?

பேட்டர்களை விட சிறப்பாக பேட்டிங் விளையாடிய பந்துவீச்சாளர் குல்தீப் குறித்து...

News image
பந்தினை டிஃபென்ஸ் ஆடும் குல்தீப் யாதவ். - படம்: ஏபி
Updated On :24 நவம்பர் 2025, 9:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் 100 பந்துகளைக் கடந்து விளையாடியுள்ளார்.

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களை விட அதிகமான பந்துகளை குல்தீப் யாதவ் விளையாடுவது பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 194/9 ரன்கள் எடுத்துள்ளது.

சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 134 பந்துகள் விளையாடி 19 ரன்கள் எடுத்தார்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 97 பந்துகள் விளையாடியதே இரண்டாவது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Kuldeep Yadav has played over 100 balls in the second Test against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.