அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவின் நெகிழ்ச்சியான செயல் குறித்து...

News image
ஸ்மிருதி மந்தனா உடன் ஜெமிமா. - படங்கள்: இன்ஸ்டா / ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
Updated On :28 நவம்பர் 2025, 8:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது தோழி ஸ்மிருதி மந்தனாவுக்காக மகளிர் பிபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

தோழியின் இக்கட்டான நேரத்தில் பணம் தேவையில்லை என வெளிநாட்டு தொடரில் இருந்து விலகிய இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

துயரத்தில் ஸ்மிருதி மந்தனா

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதனால், 10 நாள்கள் விடுமுறையில் ஜெமிமா இந்தியாவுக்கு வந்தார்.

மந்தனாவின் தந்தை உடல்நிலை மோசமானது. மேலும் அவரது காதலனும் ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் பரவின. அதனால், திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குரியாகி உள்ளது.

இந்த நிலையில், மகளிர் பிபிஎல் சீசனில் இருந்து ஜெமிமாவை விடுவித்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஜெமிமா சிறப்பாக விளையாடி வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.

நட்புக்கு இலக்கணம்!

பிரிஸ்பேட் ஹீட் அணிக்காக விளையாடும் ஜெமிமா மீதமூள்ள நான்கு போட்டிகளில் ஒருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பிய அவர் தனது தோழிக்கு ஆறுதலாக இருக்க விடுப்பு கேட்டுள்ளதற்கு பிபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தச் செயலுக்காக பிபிஎல் மற்றும் ஜெமிமாவுக்கு உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பிபிஎல் தொடரில் விளையாடும் ஒரே வீராங்கனையாக ஜெமிமா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Indian cricketer Jemimah Rodrigues has pulled out of the Women's BPL series in favor of her friend Smriti Mandhana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.