ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

முதல் டெஸ்ட்டில் அசத்தும் இந்தியாவின் பந்துவீச்சு பற்றி...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர் முகமது சிராஜ். - படம்: ஏபி

Updated On :2 அக்டோபர் 2025, 10:58 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

டாஸ் வென்ற 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டினை அகமதாபாதில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது.

அடுத்து, தொடர்ச்சியாக 7,10,12-ஆவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்தியாவின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் தற்போது ரோஷ்டன் சேஸ் 5 ரன்கள், ஷாய் ஹோப் 4 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

Summary

India's Mohammad Siraj has been bowling exceptionally well in the match against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.