சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

அகமதாபாத் டெஸ்ட்: சிராஜ் பந்துவீச்சினால் தடுமாறும் மே.இ.தீ.!

முதல் டெஸ்ட்டில் அசத்தும் இந்தியாவின் பந்துவீச்சு பற்றி...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர் முகமது சிராஜ். - படம்: ஏபி

Updated On :2 அக்டோபர் 2025, 10:58 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

டாஸ் வென்ற 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டினை அகமதாபாதில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது.

அடுத்து, தொடர்ச்சியாக 7,10,12-ஆவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்தியாவின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் தற்போது ரோஷ்டன் சேஸ் 5 ரன்கள், ஷாய் ஹோப் 4 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

Summary

India's Mohammad Siraj has been bowling exceptionally well in the match against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.