மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மதுரையில் ‘தல’ தோனி! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை வந்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்ததைப் பற்றி...

News image

மதுரையில் ‘தல’ தோனி.

Updated On :9 அக்டோபர் 2025, 4:15 pm IST

மதுரையில் கிரிக்கெட் திடல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சர்வதேசப் போட்டியாக இருந்தாலும் சரி, சாதாரண டிஎன்பிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கிரிக்கெட் திடலில் நேரடியாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சர்வதேச போட்டிகள், ஐபிஎல், ரஞ்சி டிராபி போட்டிகள் தலைநகர் சென்னையில் மட்டும் நடத்தப்படும் நிலையில், டிஎன்பிஎல் போட்டிகள் திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, கோவை போன்ற நகரங்களிலும் நடத்தப்படுகின்றன. இதனால், மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை நேரடியாகப் பார்க்க திண்டுக்கலுக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் சர்வதேச போட்டிகள், ரஞ்சி டிராபி போட்டிகள், ஐபிஎல் போன்றவைகள் நடத்தப்படும் வகையில் மதுரை சிந்தாமணியில் வேலம்மாள் குழுமம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் திடல் கட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் சுமார் ரூ.325 கோடி செலவில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சர்வதேச கிரிக்கெட் திடலான வேலம்மாள் கிரிக்கெட் திடலைத் திறந்து வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனி மதுரைக்கு வருகைத் தந்துள்ளார்.

இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த தோனியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து தல... தல... என கோஷமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

தோனி திறந்துவக்கவுள்ள கிரிக்கெட் திடலில் உடற்பயிற்சிக் கூடம், பயிற்சி அரங்கம், கார் பார்க்கிங் வசதி, மழைபெய்தால் தண்ணீர் உறிஞ்சும் கருவி, உயர்கோபுர மின்விளக்குகள், அவரச ஊர்தி வசதி, மருத்துவ வசதி, யோகா மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் திடல் நிபுணர்களின் ஆலோசனையில்படி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கேலரியில் மொத்தமாக 20,000 பேர் வரை ஒரே நேரத்தில் போட்டியினை ரசிக்க முடியும். முதல்கட்டமாக 7,300 பேர் உட்கார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்காக இந்தக் கிரிக்கெட் திடலைச் சுற்றிலும் 197 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Summary

'Thala' Dhoni in Madurai! Fans give him a warm welcome!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.