உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 259 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 258 எடுத்துள்ளது.
உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 259 ரன்கள் இலக்கு!
படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 258 எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய நிலாக்‌ஷி டி சில்வா 28 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் சமாரி அத்தப்பத்து அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 72 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். ஹாசினி பெரேரா 44 ரன்களும், விஷ்மி குணரத்னே 42 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சோஃபி டிவைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ப்ரீ லிங் 2 விக்கெட்டுகளையும், ரோஸ்மேரி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

Summary

Sri Lanka scored 258 runs for the loss of 6 wickets in their match against New Zealand in the World Cup series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com