தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸி. முடிவு கட்டும்: ஷேன் வாட்சன்

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

News image

ஷேன் வாட்சன் (கோப்புப் படம்)

Updated On :16 அக்டோபர் 2025, 7:35 pm IST

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர்கள் இருவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் சவாலாக இருக்கப் போகிறது. சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் திறமைகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால்,ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே மிகவும் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், சிறப்பாக செயல்படுவார்கள்.

இந்திய அணி எந்த ஒரு பயமும் அழுத்தமுமின்றி விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியின் இந்த ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவரும். ஆனால், அதற்கு ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், இந்திய அணி நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது என்றார்.

Summary

Former Australia player Shane Watson has said that the Indian team's dominance in ODIs will be ended by the Australian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.