ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
விரைவில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டியில் முழுமையாக விளையாட முடியாது எனத் தெரிந்தால், நான் ஒருபோதும் போட்டியில் விளையாட மாட்டேன். ஆட்டத்தை முழுவதும் விளையாட முடிந்தால் மட்டுமே நான் போட்டியில் இடம்பெறுவேன். வீரர் ஒருவர் சில ரிஸ்க்குகள் எடுத்து முடிந்த வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர்கள் வீச வேண்டியிருக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அதிக அளவிலான ஓவர்கள் வீச வேண்டியிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது, சில அசௌகரியங்கள் இருந்தன. பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம். ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 400-க்கும் அதிகமான ஓவர்களை பாட் கம்மின்ஸ் வீசியுள்ளார். ஆனால், இந்த ஆண்டு இதுவரையிலான 9 மாதங்களில் 175.1 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Australian captain Pat Cummins has said that he is willing to take risks to play in the Ashes series.
இதையும் படிக்க: அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பும்ரா தயார்!

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?

ஆஷஸ் 2027 தொடர்: அட்டவணை வெளியீடு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி தயாரா?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


