அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.

News image

அர்ஷ்தீப் சிங் (கோப்புப் படம்)

Updated On :10 செப்டம்பர் 2025, 6:11 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 6-வது மற்றும் 10-வது இடங்களுக்கு முறையே முன்னேறியுள்ளனர்.

இந்த தரவரிசைப் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

பேட்டிங்கை பொருத்தவரையில், அபிஷேக் சர்மா 829 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா இரண்டாவது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சறுக்கி 11-வது இடத்தில் உள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஒரு இடம் முன்னேறி 26-வது மற்றும் 34-வது இடங்களில் முறையே உள்ளனர். ஆல்ரவுண்டர்களில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் தொடர்கிறார்.

Summary

The ICC today released the rankings for the best players in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.