பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் | பாக். கேப்டன் சல்மான் | இந்திய கேப்டன் சூர்யா.

Updated On :17 செப்டம்பர் 2025, 11:57 am IST

இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வ் வெற்றிபெற்றது.

ஆட்டத்துக்கு முன்னதாக, டாஸ்ஸின் போதும், போட்டி முடிந்தும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்தனர்.

பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த விவகாரத்தில் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை(ஜிம்பாப்வே) நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

அவ்வாறு நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகும் யோசனையில் பாகிஸ்தான் வாரியம் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஐசிசியும் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து விலக முடிவு செய்திருந்தால், இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்த நிலையில், குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று (செப்.17) மோதும் நிலையில், அந்த ஆட்டத்துக்கான பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்ட், போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டி நடுவராக நியமிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.

Summary

Andy Pycroft removed from all Pakistan matches in Asia Cup after middle ground reached with ICC: PCB insider

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.