பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டியின் நடுவரை நீக்கக் கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி மீண்டும் நிராகரித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் சுண்டப்படும்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. இந்த விஷயம் மிகப் பெரிய பேசுபொருளானது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் எனவும், அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டது. அதனை ஐசிசி நிராகரிக்கவே, இரண்டாவது முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆண்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி முறையிடப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை ஐசிசி நிராகரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், இன்று போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான இன்றையப் போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக தொடர்வார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுத்தால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறையிலேயே இருக்குமாறு அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Summary
The ICC has once again rejected the Pakistan Cricket Board's request to remove the match umpire for refusing to shake hands with Pakistani players.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய டி20 அணி!

ஒருநாள், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்திய ஐசிசி!

இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் மீண்டும் கருத்து

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



