மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பு குறித்து...

News image

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள். - படங்கள்: எக்ஸ் / இலங்கை, ஆப்கன் கிரிக்கெட் வாரியம்.

Updated On :18 செப்டம்பர் 2025, 2:54 pm IST

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்றிரவு மோதுகின்றன.

குரூப் பி பிரிவில் இன்னும் ஓர் அணியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

இலங்கை அணி முதல் போட்டியில் ஹாங் காங், வங்கதேசத்துடன் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகாமல் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் ஹாங் காங் உடன் வென்று, வங்கதேசத்துடன் தோல்வியுற்றது.

ஆப்கானிஸ்தான் வென்றாலும் இலங்கை மோசமாக தோற்காமல் இருந்தாலே, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், புள்ளிப் பட்டியலில் அவர்கள் 4+1.546 ஆக இருக்க, வங்கதேசம் 4-0.270ஆக இருக்கிறது.

ஆப்கன் புள்ளிப் பட்டியலில் 2+2.150-ஆக இருப்பதால் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெறும். அதானால், இந்தப் போட்டி ஆப்கன் அணிக்கு வாழ்வா? சாவா? என்றிருக்கிறது.

Summary

Sri Lanka and Afghanistan will clash tonight in their last chance to qualify for the Super 4 round of the Asia Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.