இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிக அளவிலான மக்கள் உயிரிழந்தனர். அதனை நினைக்கும்போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அதிக அளவிலான வசதிகள் கிடையாது. அதனால், இதுபோன்ற துயரமான நிகழ்வுகள் மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்த ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றால், நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ஆசிய கோப்பையை வென்று எங்களால் முடிந்த சிறிதளவு மகிழ்ச்சியை அவர்களுக்கு தர விரும்புகிறோம் என்றார்.