பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

படம் | பிசிசிஐ
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் அடித்த பந்தினை கேட்ச் செய்ய முயன்றபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக் குழு ஆடுகளத்துக்கு விரைந்தது. அருந்ததி ரெட்டி பெவிலியனுக்கு நடந்து செல்ல முயற்சி செய்தார். காலில் வலி அதிகமாக இருந்ததால், சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அவர் பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அருந்ததி ரெட்டிக்கு, உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பாக காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அருந்ததி ரெட்டிக்கு காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. காயத்தின் தன்மையைப் பொருத்தே, அவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.
Summary
Indian player Arundhati Reddy was injured during a World Cup warm-up match.
இதையும் படிக்க: இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







