நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார்.

News image

தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)

Updated On :30 செப்டம்பர் 2025, 4:25 pm IST

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார்.

சர்வதேச லீக் டி20 தொடரின் 4-வது சீசன் வருகிற டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணையவுள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸுக்கு மாற்று வீரராக தினேஷ் கார்த்திக் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளார்.

ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியதாவது: டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஷார்ஜா வாரியர்ஸ் இளம் வீரர்கள் அடங்கிய அணி. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அணிக்கு அதிகமாக உள்ளது. அவர்களுடன் இணையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 686 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 412 டி20 போட்டிகளில் விளையாடி, 7437 ரன்கள் குவித்துள்ளார். அதில் 35 அரைசதங்கள் அடங்கும்.

Summary

Former Indian cricketer Dinesh Karthik will be playing in the International League T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.