தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

க்ருணால் பாண்டியா. - படம்: ஐபிஎல்

Updated On :16 ஏப்ரல் 2026, 5:37 am

ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பெருமைமிக்க சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

நேற்றிரவு சின்னசாமி திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 15.1 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆர்சிபியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா (35 வயது) 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த விக்கெட் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகள், 1000க்கும் அதிகமான ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதுவரை இந்த சாதனைப் பட்டியலில் ஐவர் இருந்தார்கள். தற்போது ஆறாவது நபராக க்ருணால் பாண்டியா இணைந்துள்ளார்.

முன்னதாக, ஜடேஜா, சுனில் நரைன், டிவைன் ப்ராவோ, அக்‌ஷர் படேல், ஆண்ட்ரே ரஸல் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.

கடந்த சீசனிலும் இந்த சீசனிலும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைக்க வேண்டுமென உறுதியுடன் விளையாடி வருகிறார்.

Summary

Krunal Pandya becomes only the 6th player to tick both boxes in ipl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.