

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தமிழ், சிங்கள மொழியில் பாடிய பாடல் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ்நாடு, இலங்கையின் ஒற்றுமையைப் பாராட்டும் விதமாக இந்தப் பாடல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் பிப்.7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தனுஷின் 3 படத்தில் அறிமுகமான அனிருத் (35 வயது) தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டது.
ஹைசன்பர்க் எழுதிய இந்த ஐசிசியின் புதிய பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஆங்கில மொழியில் வெளியான ஐசிசிக்கான பாடல் இந்த முறை தமிழ், சிங்கள மொழியில் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை அனிருத் மற்றும் தினேஷ் கமேஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.
”இரண்டு மொழிகள், ஒரே லயத்தில். இரண்டு நாடுகள், ஒரே இதயத்துடிப்பு” என இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.