

இந்திய டி20 வரலாற்றில் விராட் கோலியை முந்தி சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுடன் மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161/9 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தனியாளாகப் போராடிய சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து விளையாடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 132/8 ரன்கள் எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டி20யில் இந்தியாவுக்காக அதிக ஆட்ட நாயகன் விருதுகள்
1. சூர்யகுமார் யாதவ் - 17* (105 போட்டிகள்)
2. விராட் கோலி - 16 (125 போட்டிகள்)
3. ரோஹித் சர்மா - 14 (159 போட்டிகள்)
சமீப காலமாக ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஃபார்முக்குத் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்திருந்த நிலையில் தனி ஆளாகப் போராடி அணியின் ஸ்கோரை 161-ஆக உயர்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.