தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் விதித்த 3 நிபந்தனைகள் பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 4:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. கொழும்புவில் நடைபெறும் போட்டியில் பிப். 15 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

ஆனால், வங்கதேச அணியை உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் பிரதிநிதி முபஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

தொடர் வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் இருதரப்பு போட்டிகளை தொடங்க ஐசிசியின் உதவி மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது இந்திய வீரர்கள் மரபுபடி கைக்குலுக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரும், தங்கள் நாட்டுக்கு ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானின் கோரிக்கை தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.