

டி20 உலகக் கோப்பையின் 15-ஆவது போட்டியில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனும் பந்துவீச விரும்பினாலும் டாஸில் தோற்றதால் பேட்டிங்கில் நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறியுள்ளார்.
2024க்குப் பிறகு, இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் வெல்ல, மே.இ.தீ. அணியோ ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.