தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஸ்டீவ் ஸ்மித்தை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! தேர்வுக் குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் பேசியிருப்பதாவது...

News image

ஸ்டீவ் ஸ்மித், மார்க் வாக். - கோப்புப் படங்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 4:17 pm IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சரியான அணியைத் தேர்வு செய்யவில்லை என்றும் இது ஸ்டீவ் ஸ்மித்துக்கு அவமானம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் தோற்றது. முன்னதாக, ஜிம்பாப்வே இடமும் தோற்றதால், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.

மோசமான அணித் தேர்வு...

இந்நிலையில், முன்னாள் வீரர் மார்க் வாக் எஸ்இஎன்க்யூ பிரேக்ஃபாஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

இந்தத் தொடர் முழுவதும் தவறான அணித் தேர்வினாலும் காயத்தினாலும் சீர்குழைந்தது. சரியான் முன் தயாரிப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் சுமாரான ஒரு பிரிவில் இருந்தும் நான் நினைத்தது போலவே நடந்துவிட்டது.

நாம் எல்லோரிடமும் கனிவாக இருக்க முடியாது. சில நேரங்களில் முக்கியமான முடிவுகளை எடுத்தாகவே வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் எடுக்காததே மிகப்பெரிய தவறு என்பேன். இதைப் பல ஆண்டுகளுக்கு நினைவில் கொள்வேன்.

இந்த ஆஸ்திரேலிய அணியை விட ஸ்மித் பிபிஎல் தொடரில் எவ்வளவு கிளாஸாக விளையாடினார் என்பதை அனைவருமே பார்த்தனர்.

இது ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவமானம்...

ஸ்மித் மிகப்பெரிய ஃபீல்டர். சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அபாரமாக விளையாடுவார். முதலில் அவர்தான் தேர்வாகியிருக்க வேண்டும். ஆனால், அவரை எடுக்கவில்லை. கடைசியில் அவரை எடுத்தும் பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை.

அணித் தேர்வின் குழப்பமும் காயமும் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையவில்லை. அணித் தேர்வில் முழுமையாக தவறிழைத்துவிட்டார்கள்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100 அடிக்குப் பிறகு நல்ல வீரர்களை எடுப்பதில் என்ன பலன்? உண்மையில் இது ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவமானம்.

ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும்

மாட் ரென்ஷா சிறப்பாக விளையாடினார். அதிலும் இடதுகை பேட்டர். அவரை ஏன் கடைசி போட்டியில் எடுக்கவில்லை? டி20யில் ஃபார்மில் இருப்பது கடினம். ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும்.

ஃபார்மில் இல்லாதவர்களுக்கு நம்பிக்கை டி20யில் இடமில்லை. மேக்ஸ்வெல், கன்னோலி, கிரீன், இங்லீஷ் ஃபார்மில் இல்லாத வீரர்கள்.

தேர்வுக்குழுவினர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்றார்.

ஜிம்பாப்வே அணி மீதமிருக்கும் போட்டிகளில் தோற்று, ஓமனுடன் ஆஸி. அபார வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்குச் செல்ல முடியும். கிட்டதட்ட ஆஸி. அணி வெளியேறியதாகவே கருதப்படுகிறது.

Summary

T20 World Cup 2026: Mark Waugh slams Australian selectors for ‘insulting’ Steve Smith.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.