

டி20 உலகக் கோப்பையின் 37-ஆவது போட்டியில் இத்தாலிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்தார்.
டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இத்தாலியின் பந்துவீச்சுக்கு மிகவும் தடுமாறி விளையாடினார்கள்.
இத்தாலி வீரர்கள் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களில் நால்வர் இரட்டை இலக்கங்களிலும் நால்வர் ஒற்றை இலங்களிலும் ரன்களை எடுத்தார்கள்.
சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகாத இத்தாலி அணி தனது இரண்டாவது வெற்றிக்கான முனைப்பில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.