

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை(பிப்ரவரி 21) முதல் தொடங்கியுள்ளன. இலங்கை பிரேமதாசா திடலில் நடைபெறவிருந்த சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இருந்தபோதிலும், மழை காரணமாக போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடந்து, சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நாளை (பிப்ரவரி 22) எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.