மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | AP
Updated On :24 பிப்ரவரி 2026, 1:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மேயர் 34 பந்துகளில் 85 ரன்கள் (7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3-வது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மேயர் பேட்டிங் செய்த விதம், அவரது ஆட்டத்தை பின்வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீணாக்கிவிட்டதோ என்பது போன்று இருந்தது. அவர் மிகவும் அற்புதமான வீரர். அவரால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்பவும் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு எதிராக விளையாட முடியும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக அவர் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அணியின் சொத்து அவர்தான்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹெட்மேயருக்கு மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். அவர் அதிரடியாக விளையாடுவது மேற்கிந்தியத் தீவுகளின் தன்னம்பிக்கையை உண்மையில் மிகவும் அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.