6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :26 பிப்ரவரி 2026, 3:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்று வரும் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

அபிஷேக் சர்மா, ஹார்திக் பாண்டியா அரைசதம்! இமாலய இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 48 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ரன்கள் குவிக்கத் தடுமாறிய அபிஷேக் சர்மா, அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

YouTube video thumbnail

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.

ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களும் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டினோடெண்டா மபோசா மற்றும் சிக்கந்தர் ராஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.