

சென்னை : டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்று வரும் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்கு அதிகம் என்பதால் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்களை மட்டுமே குவித்த முடிந்தது. இதன்மூலம், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் ஜிம்பாப்வே போராடி வீழ்ந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மென்கள் மொத்தம் 17 சிக்ஸர்களைப் பெவிலியனுக்கு வெளியே பறக்கவிட்டனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ப்ரையன் பென்னெட் உலக கோப்பைத் தொடரில் சதமடிக்கும் வாய்ப்பை வெறும் மூன்றே ரன்களில் தவறவிட்டார். அவர் 6 சிக்ஸர்கள் 8 பௌண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியால் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வியடைந்த ஜிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறியது.
எனினும், வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இந்திய அணி தமது அடுத்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.