திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது ஏன்? ஆஸி. பயிற்சியாளர் விளக்கம்!

சிட்னி டெஸ்ட்டில் சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது குறித்து...

News image

டாட் மர்ஃபி பிட்சை பார்வையிடும் காட்சி... - படம்: ஏபி

Updated On :4 ஜனவரி 2026, 12:19 pm IST

சிட்னி டெஸ்ட்டில் சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பதிலளித்துள்ளார்.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் டாட் மர்ஃபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ப்யூ வெப்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளார்.

மெல்பர்ன் டெஸ்ட்டிலும் சுழல்பந்து வீச்சாளர் இல்லாமலே ஆஸி. களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:

சாதாரணமாக டாட் மர்ப்பி விளையாடி இருப்பார். ஆனால், இது ஸ்டீவ் ஸ்மித்தின் முடிவு.

சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடப் போவதில்லை. எனக்கும் டாட் மர்ப்பி பிடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.