ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அவரது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது. மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எந்தவொரு கூடுதல் அழுத்தமுமின்றி மகிழ்ச்சியுடன் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ஒரு கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நிறைய பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க வேண்டாம் எனவும் அல்லது நிறைய ஊடக செய்திகளை பின் தொடர வேண்டாம் எனவும் கூறுவேன். அவர் எந்தவொரு அழுத்தமுன்றி மகிழ்ச்சியுடன் விளையாடட்டும். வைபவ் சூர்யவன்ஷியின் மேலாளரையோ அல்லது வேறு யாரேனும் ஒருவரையோ ஊடகங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு 14-15 வயதுதான் ஆகிறது. அவர் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடட்டும். அவர் மிகவும் நன்றாக விளையாடுகிறார். அவர் நாட்டுக்கு பெருமை சேர்க்கப் போகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது, அழுத்தம் இருக்கும். ஆனால், அழுத்தத்தை ஜெய்ஸ்வால் திறம்பட கையாண்டு சூர்யவன்ஷிக்கு உதவுவார். எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல், சூர்யவன்ஷி அவரது இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாக இருக்கும் என்றார்.
Summary
Rajasthan Royals captain Ryan paraq has asked young player Vaibhav Suryavanshi to be allowed to play his natural game happily.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் தோல்வியால் அழுகை: ரசிகர்களின் இதயங்களை வென்ற சூர்யவன்ஷி!

குவாலிஃபையர் 2: டாஸ் சுண்டியதில் சர்ச்சை; ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




