நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களோ, அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரர் சஞ்சு சாம்சன் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரைப் பார்த்தால், ஒவ்வொரு அணியிலும் மிகவும் முக்கியமான இந்திய வீரர் ஒருவர் இடம்பெற்றிருப்பார். ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களாக இருந்து வருகிறார்கள். என்னைப் பொருத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரராக சஞ்சு சாம்சன் இருந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக அறிமுகமாகி, சஞ்சு சாம்சன் அந்த அணியின் அடையாளமாக மாறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைத்தாலே, பலருக்கும் சஞ்சு சாம்சன் முகம் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். அதனால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸின் வளர்ச்சிக்கு அவர் மிகவும் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் 11 சீசன்களாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Fap du Plessis has said that the absence of Sanju Samson from the Rajasthan Royals team in the current IPL season is a big loss for the team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடாதது ஏன்? ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!
ஹைதராபாத் அணியை வெளியேற்றி ராஜஸ்தான் வீறுநடை..!

சூர்யவன்ஷி மிகவும் இயற்கையான சிறுவன்..! இலங்கை கேப்டன் புகழாரம்!

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




