நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image

ஷ்ரேயாஸ் ஐயர்

படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :20 மார்ச் 2026, 4:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால், கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

மேலும், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை முன்னேறச் செய்தார். இருப்பினும், இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கோப்பையை இழந்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்த இரண்டு மாதங்கள் நாங்கள் ஒரு குடும்பமாக இருப்போம். எங்களுக்குள் எந்த அளவுக்கு அதிக நேரம் செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு எங்களால் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாக தெரிந்துகொள்ள முடியும். அணியில் உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆடுகளத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே சிறப்பான புரிதல் இருந்தால், போட்டியில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்கள் களமிறங்கும் போதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். என்னுடைய கண்கள் கோப்பையின் மீது உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.