முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மும்பை, சென்னை போட்டியின் 3 முத்தான சாதனைகள்!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 1:55 pm IST

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் முக்கியமான 3 சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

அதிக வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்

Story image

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 100-ஆவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்தது. தனது 175-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற அணிகளில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது.

93 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-ஆவது இடத்திலும், 88 வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

விக்கெட்டுகளில் சதமடித்த டுவைன் பிராவோ

Story image

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டுவைன் பிராவோ இந்தப் போட்டியில் 100-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

4 ஆயிரம் ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனி

Story image

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டித் தொடரில் 4 ஆயிரம் ரன்களைக் குவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.