தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புள்ளிகள் பட்டியலில் தில்லிக்கு முதலிடம்: கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த ரிஷப் பந்த்! (விடியோ)

11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளை எடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல்முறையாக முதலிடத்துக்கு...

News image
Updated On :23 ஏப்ரல் 2019, 7:27 am

எழில்

ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தில்லி. ராஜஸ்தான் வீரர் ரஹானே சதமடித்தது வீணானது. தில்லி அணியில் ரிஷப் பந்த் 78 ரன்களை விளாசினார். 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது ராஜஸ்தான். தனது 2-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்த ரஹானே 3 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, 19.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வென்றது. தில்லி வீரர் ரிஷப் பந்த் தனது 10-வது ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.  4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 78 ரன்களை விளாசி ரிஷப் பந்த் கடைசிவரை ஆட்டமிழக்காமல்,  அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளை எடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியது தில்லி.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.