மும்பை அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு
மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள மும்பை அணி, பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளது. மேலும் முதல் இரு இடங்களில் ஓர் இடமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தில்லி அணி 14 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியும்.
துபையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் தேர்வாகியுள்ளார். பேட்டின்சனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைல். ரஹானே, தேஷ்பாண்டே, அக்ஷர் படேலுக்குப் பதிலாக பிரிதிவி ஷா, ஹர்ஷல் படேல், பிரவீன் டுபே ஆகியோர் தில்லி அணியில் தேர்வாகியுள்ளார்கள்.
இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 ஆட்டங்களை விளையாடும் முதல் அணி என்கிற பெருமையை மும்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...