ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாடுகின்றன.
இதையும் படிக்க | பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்குமா?: மும்பை தலை மேல் கத்தி!
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் குயின்டன் டி காக் மற்றும் கிருனால் பாண்டியாவுக்குப் பதில் இஷான் கிஷன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மயங்க் மார்கண்டே மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோருக்குப் பதில் ஷ்ரேயஸ் கோபால் மற்றும் குல்திப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுமே வெற்றி வெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.