டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு: சென்னையில் இரண்டு மாற்றங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

அந்த அணியில் மஹிபால் லோம்ரோர், லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பராக் மற்றும் கிறிஸ் மாரிஸ் ஆகியோருக்குப் பதில் ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், ஆகாஷ் சிங் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீபக் சஹார் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோருக்குப் பதில் கேஎம் ஆசிப் மற்றும் சாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com