விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளித்ததால் கரோனா பாதிப்பா?: பிசிசிஐ தரப்பு பதில்

நடராஜனுக்கு எப்படி கரோனா பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 10:59 am

DIN

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

சன்ரைசர்ஸ் - தில்லி ஆட்டம் தொடங்கும் முன்பு நடராஜனுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து சன்ரைசர்ஸ் - தில்லி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நடராஜனுக்கு எப்படி கரோனா பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. தீவிரமான கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் உள்ளார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வீரர்களிடம் கூறியுள்ளோம். இனிமேலும் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டி பாதிக்கப்படாது என நம்புகிறோம். தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலையளித்தாலும் பீதியடையத் தேவையில்லை. எல்லாமே நன்றாக நடக்கும் என நம்புவோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து முழு ஆதரவு கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவர்களும் கவனித்து வருகிறார்கள். மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதித்ததால் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று தான் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை விளையாடியது. அதற்கு முன்பே நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணியும் தீவிரமான கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தில் தான் உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.